2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இரு பஸ்கள் மோதி விபத்து: 12 பேர் காயம்

Kogilavani   / 2015 ஜூலை 07 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் ஆஸிக்

கேகாலை - ரம்புக்கன வீதி, புவக்தெணிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை (07) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 12பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பஸ்கள், நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .