2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பாவனைக்குதவாத 5,000 கிலோ கிராம் அரிசி மீட்பு

Sudharshini   / 2015 ஜூலை 08 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் நகரிலுள்ள சதொச  நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த  பாவனைக்குதவாத 5,000 கிலோகிராம் அரிசியை பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.  

கைப்பற்றப்பட்ட அரிசியை  ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன்  சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்த உள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .