2025 ஜூன் 26, வியாழக்கிழமை

விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்கு தடை

Sudharshini   / 2015 ஜூலை 08 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளையில் விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாத்தளை மாவட்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான லக்ஷ்மன் வசந்தபெரேரா,  மத்தளை, அளுவிகாரையில் வைத்து விவசாயிகளுக்கு உபகரணங்களை வழங்க முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(6) மாலை, மாத்தளையில்   இடம்பெற்றுள்ளது.

மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர் த அல்விஸ் வழங்கிய தகவலுக்கமைய, தேர்தல் ஆணையாளரால் இந்நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .