2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தீர்வு கிட்டும்வரை போராட்டம் தொடரும்: தொண்டமான்

Sudharshini   / 2015 ஜூலை 08 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

முதலாளிமார் சம்மேளனம் உரிய தீர்வு தரும் வரை, தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து மெதுவாக பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் நியாயமான சம்பளம் கிடைக்கும் வரை தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டனிலுள்ள இ.தொ.கா கட்சி காரியாலயத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவு பெற்றவுடன், 1,000 ரூபாய் சம்பள உயர்வு வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்திதுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன்போது முதலாளிமார் சம்மேளனம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு எங்களால் ஒத்துபோக முடியாததன் காரணத்தினால் நாங்கள் தோட்ட தொழிலாளர்களை தொடர்ச்சியாக மெதுவான பணிகளில் ஈடுபடுமாறு அறிவித்திருந்தோம்.

கடந்த இரண்டு நாட்களாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போதிலும், தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களின் பிள்ளைகளை சிறுவர் நிலையத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு சிறுவர் நிலைய உத்தியோகஸ்தர்களுக்கும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

இதனையடுத்து, நாங்கள் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் நேற்று அதிகாலை சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டோம்.
நாங்கள் இவ்வாறு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்படுத்ததையடுத்து, இன்று (08) காலை எங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையில்  உடனடியாக சிறுவர் நிலையத்தை திறப்பதற்கு கம்பனியாளர்கள் சம்மந்தம் தெரவித்ததையடுத்து, நாங்கள் சத்தியாகிரக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.

அத்தோடு, நான் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை. எங்களது தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரமே பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .