2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மக்களுக்கு கையளிப்பதற்காக 400 வீடுகள் தயாராக உள்ளன

Kogilavani   / 2015 ஜூலை 13 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுதர்ஷினி சாமிவேல்

மலையகத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தனிவீட்டு திட்டத்தை முழுமை பெற செய்ய வேண்டுமாயின் எமக்கு அதிகாரம் வேண்டும். அதற்காக மலையக மக்கள் ஒன்றிணைந்து வாக்கு பலத்தை பிரயோகித்து தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு  அனுப்ப வேண்டும் என பொருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

'தற்போது மக்களுக்கு கையளிப்பதற்காக 400 வீடுகள் தயார் நிலையில் உள்ளன. எதிர்வரும் காலத்தில் 2 இலட்சம் வீடுகளை அமைப்பதற்கு இந்த 400 வீடுகள் போதுமானது' என்றும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

மஹிந்தவின் ஆட்சி காலத்தில் மலையகத்தில் 35,000 தரிசு நிலம் அடையாளம் காணப்பட்டது. அதைக்கொண்டு மக்களுக்கான தனிவீட்டு திட்டத்தை அமைத்திருக்க முடியும். ஆனால், மலைக மக்களுக்கான தனிவீட்டு திட்டத்தை அமைத்து கொடுக்கும் நோக்கம் அந்த அரசாங்கத்துக்கு இருக்க வில்லை. ஐ.தே.க அந்நிலையை மாற்றி தனிவீட்டு திட்டத்தை வகுத்து நாடாளுமன்றிலும் நிறைவேற்றியது.

தொழிலாளர்களை ஏமாற்றி ஆட்சியமைக்க முடியாது. எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்று தமிழ் முற்போக்கு கூட்டணி பேரம் பேசும் சக்தியாக செயற்படும். எமது கட்சி சார்பில் 5 பேர் கட்டாயம் நாடாளுமன்றம் செல்வோம். மக்கள் மீது நம்பிக்கையுள்ளது. அவர்கள் சரியானவர்களையும் மக்களுக்காக உழைப்பவர்களையுமே நாடாளுமன்றத்துக்கு அனுப்புவார்கள் என அவர் தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .