2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மானை வேட்டையாடிய இருவருக்கு பிணை

Kogilavani   / 2015 ஜூலை 13 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி.எம்.ரிஃபாத்

விக்டோரியா, நீர்த்தேக்கத்தை அண்மித்த வனப்பகுதியில் நடமாடிய மானை, வேட்டையாடி இறைச்சியாக்கிய இருவரை 50,000 ரூபாய் பிணையில் செல்ல, தெல்தெனிய நீதவான் நீதிமன்ற நீதவான், ஞாயிற்றக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளார்.

தெல்தெனிய உடதும்பரை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடதும்பர, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலை தொடர்ந்து,  குறிப்பிட்ட வீடொன்றை சோதனைக்குட்படுத்திய பொலிஸார், குறித்த வீட்டிலிருந்து  மான் இறைச்சியையும் கைப்பற்றியதோடு சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

விக்டோரியா, நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் அதிகமான மிருகங்கள் வேட்டையாடப்படுவது தொடர்பில் தமக்கு தெரியவந்துள்ளதாக பொலிஸார தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .