2025 ஜூன் 25, புதன்கிழமை

ஹிந்திமொழி பயின்றவர்களுக்கு பரிசளிப்பு

Kogilavani   / 2015 ஜூலை 17 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஹிந்தி மொழி மற்றும் ஏனைய துறைகளில் தமது பயிற்சியை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 19 ஆம் திகதி, கண்டி பேராதனை வீதியில் அமைந்துள்ள கண்டி மகளிர் உயர்கல்லூரி மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கண்டி, உதவி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் முற்றிலும் இலவசமாக இந்நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

கண்டி, உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில் இயங்கிவரும் 'டக்சின் பாராதீய ஹிந்திபிரசாரினி சபா' என்ற அமைப்பால் நடத்தப்பட்ட, ஹிந்தி மொழி மற்றும் ஏனைய துறைகளில் தமது பயிற்சியை முடித்துகொணட மாணவர்களுக்கே இதன்போது பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகர் செல்வி.ராதா வெங்கட்டராமன் இந்நிகழ்வில்  பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதுடன் இன்னும் பலர் சிறப்பு அதிதகளாகக் கலந்துகொள்ள உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .