2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சிறுமி உயிரிழப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 22 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ். அப்துல் ஹலிம்

கண்டி - திருகோணாமலை வீதியில் முச்சக்கரவண்டியும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர். 

மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா சபியா என்று ஐந்து வயது சிறுமியே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். 

மாவனெல்லையிலிருந்தது திருகோணமலைக்கு சென்ற முச்சக்கரவண்டி கந்தளாய் 93ஆம் கட்டையில் வைத்து காருடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .