Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமோக வெற்றிப்பெறுவதுடன், இம்மாவட்டத்தில் ஐ.ம.சு.கூ சார்பில் போட்டியிடும் உறுப்பினர்கள் ஏழு பேரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவது உறுதி என சப்ரகமுவ மாகாண அமைச்சர் ரஞ்ஜித் பண்டார தெரிவித்தார்.
நிவித்திகலை தேர்தல் தொகுதியில் திங்கட்கிழமை(03) இடம்பெற்ற, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'நாட்டின் அபிவிருத்தி தற்போது நத்தை வேகத்தில் செல்கிறது. கடந்த ஆறு மாதங்களாக ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், எந்தவிதமான அபிவிருத்திகளையும் மேற்கொள்ளவில்லை. இதை மக்கள் தற்போது நன்குணர்ந்துள்ளனர்'
'நாட்டின் பொருளாதாரம் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. தேயிலை மற்றும் இறப்பரின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
தோட்ட மக்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டியது சாதாரண விடயமாகும். இதை பெற்றுக்கொடுக்க தகுதி இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், எவ்வாறு? நாட்டின் அபிவிருத்தி மற்றும் ஏனைய பிரச்சினைகளை தீர்க்க போகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தர்மத்தில், குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்வரும் 18ஆம் திகதி மக்கள் நல்லப் பாடம் புகட்டுவார்கள்.
இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள், சிலர் மேற்படி மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதி ஆலயங்களுக்கு தெங்வங்களின் சிலைகளை வழங்கி வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்;.
மக்கள் இலவசமாக கொடுப்பதை பெற்றுகொண்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கே வாக்களிப்பார்கள். இதை எவராலும் தடுக்க முடியாது' எனவும் அவர் கூறினார்.
மக்களை ஏமாற்றிய காலம் மாறிவிட்டது. இன்று தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள். மக்களுக்கு கூடுதலான அபிவிருத்திகளையும் சேவைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கமே செய்துள்ளது.
எனவே, எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மீண்டும் ஆட்சி அமைப்பதுக்கு நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும்' என சப்ரகமுவ மாகாண சபை அமைச்சர் ரஞ்ஜித் பண்டார மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
33 minute ago
58 minute ago
1 hours ago