Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மொஹொமட் ஆஸிக்
'அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்' என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
67 வருடங்களாக மாறிமாறி ஆட்சி புரிந்த இரண்டு பிரதான கட்சிகளும் இன்று செல்லாக் காசாக மாறிவிட்டதெனவும் அவர் கூறினார்.
அக்குரணையில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,
'மஹிந்த ராஜபக்ஷ, இன்று தேர்தலில் போட்டியிட்டாலும் அவர் ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது அவருக்கு ஜனாதிபதி என்ற அதிகாரம் இருந்தது. மூன்றில் இரண்டு பெறும்;பான்மையுள்ள அரசின் அதிகாரம் இருந்தது. மாகாண சபைகளின் அதிகாரம் இருந்தது, உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் இருந்தது. சகோதரர்களுடைய அதிகாரம் இருந்தது. புதல்வர்களுடைய அதிகாரம் இருந்தது.
இவ்வளவு அதிகாரங்களை வைத்துக் கொண்டும் மக்களுக்கு அன்னதானங்களை வழங்கியும் தோல்வியுற்ற மஹிந்த, இனி ஒரு போதும் வெற்றிபெறப் போவதில்லை' என்றார்.
'ஐக்கிய தேசியக் கட்சியும் நல்லாட்சியை சரிவர நடத்தவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சரிசவர நிரைவேற்றவில்லை. 19 ஆம் திருத்தச் சட்டம், எங்களுடைய முயற்சியால் நிறைவேற்றப்பட்ட போதும் அதில் வரும் ஆணைக்குழுக்கள் எதனையும் அமைக்க வில்லை.
மத்திய வங்கியில் இடம்பெற்ற 6,000 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக, நேர்மையான விசாரணையைக் கூட நடத்தவில்லை. இவ்வாறான நிலையில் 67 வருடங்களாக மாறி மாறி ஆட்சி புரிந்த இரண்டு பிரதான கட்சிகளும் இன்று செல்லாக் காசாகவிட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .