2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற சந்தேக நபர் கைது

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, மு.இராமச்சந்திரன்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ரூப் தோட்ட பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்ற 45 வயதான சந்தேகநபரை நேற்று (07) தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ரூப் தோட்ட பகுதியில் கடந்த புதன்கிழமை மேற்படி சிறுமி, அருகிலிருந்த கடையொன்றுக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். இதன்போது அக்கடையிலிருந்த 45 வயது மதிக்கதக்க குறித்த சந்தேகநபர்; சிறுமியை துஷ்பிரயோகத்துக் உட்படுத்த முயற்சித்துள்ளார்

இதனையடுத்து, அச்சிறுமி யாரிடமும் சம்பவம் தொடர்பில் கூறாமல் தனது வீட்டுக்கு சென்று விஷம் மருந்தியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சிறுமியை உறவினர்கள் உடனடியாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அங்கு சிகிச்சைபெற்று வந்த சிறுமி, சம்பவம் குறித்து தனது பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து, பெற்றோர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த பிரதேசவாசிகள், மேற்படி சந்தேகநபரை மடக்கிப்பிடித்து தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .