2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மாணவியை காணவில்லையென முறைப்பாடு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன், வெளிஓயா மேற்பிரிவு தோட்டத்தில் வசிக்கும் 17 வயதுடைய மாணவி ஒருவர், கடந்த 11ஆம் திகதியிலிருந்து  காணாமல் போயுள்ளார் என வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதியன்று  காலை தனியார் வகுப்புக்குச் சென்ற மாணவி, வீட்டுக்கு திரும்பாததையடுத்து மாணவியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு தேடியுள்ளனர். எனினும், குறித்த மாணவி கிடைக்க வில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

வட்டவளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கமைய  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு தேடுதல் பணிகளிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .