2025 மே 19, திங்கட்கிழமை

21 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ, துவாரக்ஷன்

மலையகத்தின் இரு வேறு பிரதேசங்களில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, 21 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய லக்ஸபான- எமில்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 18 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி, மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

13 பெண்களும் 5 ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை, இராகலை எமஸ்ட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி மூவர், உடபுஸ்ஸலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று   காலை இடம்பெற்றுள்ளதுடன்,  சம்பவத்தில் ஆண்கள் குளவி கொட்டுக்கு இலக்காயுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X