Editorial / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் உள்ள மூன்று பாடசாலைகளுக்கு இன்று (11) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச கல்விப் பணிப்பாளர் திருமதி நிலானி தம்மிக்க தெரிவித்தார்.
அந்தந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை இடையூறு இன்றி தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இன்று மூடப்பட்ட கலிபானவளை உயர்தரப் பாடசாலை மாணவர்கள் வெல்லவாய கம்பஹா மகாவித்தியாலயத்திற்குச் சென்றுள்ளனர்.
பாறைகள் விழும் அபாயம் காரணமாக மூடப்பட்ட பிளாக்வுட் உயர்தரப் பாடசாலை கட்டிடம் இடிந்து விழும் அபாயம் காரணமாக, அம்மாணவர்கள் ஹல்துமுல்ல தமிழ் உயர்தரப் பாடசாலைக்குச் சென்றனர்..
6 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago