R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
சீரற்ற வானிலையால் ஹட்டன் எம்.ஆர் பகுதியிலுள்ள கட்டடம் ஒன்று உடைந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
இதனால் குறித்த கட்டடத்தில் சாரதி பயிற்சி நிலையத்தை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து நேற்று இரவு (1) 10 மணிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அடை மழையைத் தொடர்ந்து 4 மாடிகளைக் கொண்ட குறித்த கட்ட்டத்தின் சுவர்கள் வெடித்துள்ளன.
குறித்த கட்ட்டத்துக்கு கீழ், காசல்றீ நீர்த்தேக்கத்துக்கு நீரை ஏந்திச் செல்லும் சிறிய கால்வாய் ஒன்று காணப்படுவதால் கட்டடம் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் தெரிவித்தார்.

4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025