2026 மே 09, சனிக்கிழமை

4 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று (17) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், அதிகூடிய 90.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி, கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .