மொஹொமட் ஆஸிக் / 2017 ஒக்டோபர் 19 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை-வரக்காலபொல வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவந்த 36 வயது நபரொருவர், 4 ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளாரென, வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.
நோயொன்றுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக, செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி நபரே, இவ்வாறு இன்று காலை, 4ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
மாடியிலிருந்து கீழே விழுந்ததனால் படுகாயமடைந்த நபர் ஸ்தலத்திலேயே பலியானாரென தெரியவருகிறது.
இது தொடர்பில் வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026