2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

50 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி

Freelancer   / 2022 நவம்பர் 05 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

பொகவந்தலாவை - கெம்பியன் புதிய வீடமைப்பு பகுதியில் நேற்று மாலை முச்சக்கர வண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்து எற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .