2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு

Freelancer   / 2023 மே 18 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கொஸ்லந்த பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் நேற்று கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட காணி ஒன்றினை ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 6 அடி கொண்ட  225 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் கஞ்சா பயிரிடப்பட்ட காணியை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு, 15 பேச் நிலப்பரப்பில் 6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகளை பிடிங்கி அழித்ததுடன் அதில் ஒரு பகுதியை சட்டநடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .