2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

600 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

சப்ரகமுவ மாகாண சுகாதார திணைக்கள பணியாளர்களுக்கு, 600 இலட்சம் ரூபாய் பெருமதியான பாதுகாப்பு சீருடைகள், உபகரணங்கள், இன்று (8) வழங்கி வைக்கப்பட்டன.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவால், இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில் வைத்து, உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் பாதுகாப்பு சிரூடை, கண்ணாடிகள், முகக்கவசங்கள், பூட்ஸ், வெப்பமாணி உட்பட 600 இலட்சம் ரூபாய் பெருமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் கபில கன்னங்கர, இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அநோஜ் ரொட்ரிகோ, ஆகியோர் கலந்துகொண்டனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .