2026 மே 14, வியாழக்கிழமை

’74 பேர் மாத்திரமே முகாம்களில் தங்கியுள்ளனர்’

ஆ.ரமேஸ்   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவால், தற்போது 24 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேர், தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என, நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி. புஸ்பகுமார் தெரிவித்தார்.

கடந்த 30ஆம் திகதி முதல், நேற்று (02) மாலை வரை பெய்த கடும் ​மழை காரணமாக, நுவரெலியாவின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக, 240 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். எனினும், இந்த 74 பேரைத் தவிர்ந்த அனைவரும், தற்போது தங்களது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .