2026 மே 09, சனிக்கிழமை

’அங்கத்துவம் பெறும் முதல் 100 பேருக்கு பரிசு’

மொஹொமட் ஆஸிக்   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குறணை பொது நூலகத்தில், எதிர்வரும் மாதம் அங்கத்துவம் பெற்றுக்கொள்ளவுள்ள முதல் 100 அங்கத்தவர்களுக்கு, பரிசுப்பொதிகள் வழங்கவுள்ளதாக, அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எம். இஸ்திஹார் தெரிவித்தார் .

அக்குறணை பொது நூலகத்தில், நேற்று முன்தினம் (20) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அக்குறணை பிரதேச சபையின் பொது நூலகத்துக்கு, பாரிய அளவு நிதி செலவிடப்பட்டாலும் அதன் பலனை பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் எண்ணிக்கை, மிகக் குறைவாக உள்ளது என்றும் எனவே, வாசிப்புப் பழக்கத்தையும் ​நூலகத்தில் அங்கத்துவத்தை அதிகரிக்கும் முகமாக​வுமே, இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் இலக்கிய, வாசிப்பு மாதங்களை முன்னிட்டு, இத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .