2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Sudharshini   / 2016 ஜூன் 06 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

லுணுகலை  அல்-அமின் மகா வித்தியாலயத்தில் ஒன்றறை கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்படவுள்ள இரண்டு மாடிகட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தலைமையில் இன்று (06) நடைபெற்றது.

இயற்கை அனர்த்தத்தினால் லுணுகலை  அல்-அமின் மகா வித்தியாலயம் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் தலையிட்டினால் குறுகிய காலத்துக்குள் வித்தியாலயம்  சீரமைக்கப்படவிருப்பது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான, ஊவா மாகாண சபை உறுப்பினர்களான .ஆ கணேசமூர்த்தி மற்றும் ஆ. சிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.    

                               


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .