Editorial / 2024 மே 26 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
சிவனொளிபாத மலைக்கு கடந்த 22 ம் வந்த ஒருவர், திடீர் சுகவீனம் அடைந்த நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
55 வயது மதிக்கத்தக்க இவரை அடையாளம் காண மஸ்கெலியா பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இவரை தெரிந்தவர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார 052-2277222 அல்லது மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி 052-2277261 ஆகிய இருவரில் ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவரது, உடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள சவச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .