2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கிடைத்த வெற்றி

Editorial   / 2022 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் வேதனத்தை வழங்க மறுத்து கம்பனிகள் தாக்கல் செய்திருந்த வழக்கில், தொழிலாளர்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் முன்மொழியப்பட்ட 1000 ரூபாய் சம்பள கோரிக்கை தொழில் அமைச்சினால் ஆய்வு செய்யப்பட்டு, வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டது. இவ்வர்த்தமானிக்கு எதிராக பெருந்தோட்ட கம்பனியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, தொடர் விசாரணைக்குப் பின் இவ்வழக்கு இன்று (09) தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய வேதனத்தை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வுத்தரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கும் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும்.
 
எதிர்காலத்திலும் தொழிலாளர்களுக்கு அதிக சமபளத்தை பெற்றுத் தருவதில்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒருப்போதும் பின்வாங்காது. மேலும் தற்போதைய  சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல் 1000 ரூபாய் சம்பளம் என்பது போதுமானதல்ல எனவே மற்றுமொரு சம்பள உயர்வை நோக்கி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்படும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .