Freelancer / 2023 மார்ச் 29 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் அரிசி நிவாரணம் பெருந்தோட்ட மலையக மக்களுக்கும் வழங்கப்படுதல் அவசியமாகும் என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற குறைந்த வருமானம் பெறும் 29 லட்சம் மக்களுக்கான அரிசி நிவாரணத்தில் கட்டாயமாக பெருந்தோட்ட மலையக மக்களும் உள்வாங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இலங்கை நாட்டிலே உழைப்புக்கேற்ற ஊதியம் பெறப்படாமல் குறைந்த வருமானம் பெறுவது பெருந்தோட்ட மலையக மக்களே. ஆகவே பெருந்தோட்ட மலையக மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளேன் என்றார்.
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
37 minute ago
58 minute ago
1 hours ago