2025 மே 05, திங்கட்கிழமை

அஸ்வெதும மலை சரிகின்றது: பல வீடுகள் சிக்குண்டன

Editorial   / 2023 டிசெம்பர் 10 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹல்துமுல்ல பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள கலிபானவல அஸ்வெதும மலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. கலிபானவல கிராமத்தில் இருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேர் வெளியேற்றப்பட்டனர். இதனால்இ பாரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது என  ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் ஏ.ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் ஏ. கே. ஜே. திருமதி பிரியங்கிகா தெரிவித்தார்.
மண்சரிவுக்கான அடிப்படை அறிகுறிகள் தென்பட்டதையடுத்து இருபத்தைந்து குடும்பங்கள் உடனடியாக அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும்இ அந்த வீடுகளில் இருந்த உடமைகளும் காலையில் அகற்றப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் திருமதி பிரியங்கிகா தெரிவித்தார்.

  ஆய்வுக்குப் பிறகுஇ தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அந்த இடத்தை அதிக ஆபத்துள்ள பகுதியாக நியமித்தது.

இந்த மண்சரிவினால் சுமார் முப்பது ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதுடன்இ நெற்பயிர் ஒன்றும் மண்சரிவில் மூழ்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 6 வீடுகள் மூழ்கியுள்ளதாகவும்இ இடிபாடுகள் மேலும் கீழுமாக நகர்ந்து ஏனைய வீடுகள் மூழ்கியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X