2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இரண்டாவது தடவையாகவும் முருகன் ஆலயத்தில் திருட்டு

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

எட்டாம்பிட்டிய  பொலிஸ்  பிரிவிற்கு  உட்பட்ட   பண்டாரவளை - நெளுவ தோட்ட ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம்   இவ் வருடத்தில் இரண்டாவது  முறையாகவும்   உடைக்கப்பட்டு  திருடபட்டுள்ளது.

இதன்போது ஆலய விக்ரகத்தின்  தாலி, ஆலயத்தின்   திருவிழாவில் சேகரிக்கப்பட்ட   பணம்,  உண்டியல்  பணம்  என்பன   திருடபட்டுள்ளன.

 கடந்த முறை இடம்பெற்ற   திருட்டு சம்பவம்  தொடர்பாக   இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படாத நிலையில்,  இரண்டாவது முறையாகவும் உடைக்கப்பட்டு  திருட்டு  சம்பவம்   இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக  எட்டாம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X