2026 மே 09, சனிக்கிழமை

இரத்தினபுரி மாவட்டத்தில்தாழ் நிலங்கள் மூழ்கும் அபாயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில், விட்டு, விட்டுப் பெய்யும் மழை காரணமாக, மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் நீரில் மூழ்கும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

மழையும் வெயிலும் மாறி மாறி வருவதன் காரணமாக, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இதேவேளை, பலாங்கொடை பெலிஹுல்ஓயா, ஹப்புத்தளை வரையான வீதியில் பனிமூட்டம் காணப்படுகின்றமையால், வாகன சாரதிகள் நிதானமாக வாகனங்களைச் செலுத்தி செல்லுமாறு, பொலிஸார் அறிவிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், இரத்தினபுரி, பலாங்கொடை, எஹலிய கொடை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில், மண்சரிவு ஏற்படலாம் என்று, இலங்கை கட்டட ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்​கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .