2026 மே 09, சனிக்கிழமை

dd

இரத்தினபுரி வைத்தியசாலைக்கு பெருந்தொகையான முகக் கவசம் அன்பளிப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

 

இரத்தினபுரி பிரதான பொது வைத்தியசாலைக்கு, பெருந்தொகையான முகக்கவசம் (ஆயளம) அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேற்படி வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் சேவையாளர்களின் நலன் கருதியே, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவால், பெருந்தொகையான முக பாதுகாப்பு கவசம், நேற்று(6) அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேற்படி வைத்தியசாலையில், 1,400 நோயாளிக்கான கட்டில்கள் உள்ளதுடன், நாளாந்தம் 3,000 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைத்தியசாலையில், விசேட வைத்திய நிபுணர்கள் 56 பேரும், ஏனைய வைத்தியர்கள் 185 பேரும், தாதியர்கள் 750 பேரும், சேவையாளர்கள் 1,100 பேரும் சேவையாற்றி வருகின்றனர்.

மேற்படி வைத்தியசாலையானது, 65 ஏக்கர் நில பரப்பளவை கொண்டதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .