2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இராகலையில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2021 நவம்பர் 02 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.   

நுவரெலியா, வலப்பனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்தே கொட்டும் மழைக்கு மத்தியில் ராகலை நகரில் குறித்த போராட்டத்தில் முன்னெடுத்திருந்தனர்.

இராகலை அஞ்சல் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம் ஆரம்பமானதுடன்,  பதாதைகளை தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பிய வண்ணமும் இராகலை முருகன் கோவில் வரை போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்றனர். 

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. அதற்கு உடனடி தீர்வு வேண்டும். இனியும் காலம் இழுத்தடிக்கப்படக்கூடாது என அதிபர், ஆசிரியர்கள் வலியுறுத்திக்கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .