2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இளைஞனின் சடலம் மீட்பு

Kogilavani   / 2021 ஜனவரி 04 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை பொலிஸ்  பிரிவுக்கு  உட்பட்ட  ஹைபொரஸ்ட் கோனகலை டிவிசனில், இன்று (04) மதியம்  இளைஞர்  ஒருவரின்  சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, இராகலை  பொலிசார்  தெரிவித்தனர்.

வேலாயுதம் இந்திரசந்திரன் வயது (22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞனின்  சடலம்  அவரது வீட்டுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X