2025 ஜூன் 28, சனிக்கிழமை

உக்குவளையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

Editorial   / 2025 ஜூன் 22 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.எம்.ஜலீல்

உக்குவளை பிரதேச சபைக்கான புதிய தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோரை  தெரிவுசெய்யும் வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை (20) காலை 9.00 மணி அளவில் இப் பிரதேச சபை கேட்போர் அரங்கில் நடைபெற்றது

மத்திய மாகாண காரிய ஆணையாளர் திருமதி ஏ.எம்.கே. சீ. கே. அத்தபத்து தலைமையில்  தலைவரை தெரிவு செய்யும் ரகசிய வாக்கெடுப்பில்  14 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தியில் இருந்து    நிமல் கருணாரத்ன தலைவராகவும்  பிரதித் தலைவராக   12  வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.ராபியும் தெரிவுசெய்யப்பட்டனர்

 மே.6 ஆம் திகதியன்று நடைபெற்ற உள்ளூராட்சி மாகாண சபைத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட  கட்சிகளில் போட்டியிட்ட இக் கட்சிகள் சார்பாக மொத்தம் 27 பேர் உக்குவளை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .