2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

உணவு விஷமடைந்தமையால் குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

Princiya Dixci   / 2016 மே 03 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.தி. பெருமாள்

தனது மரக்கறித் தோட்டத்துக்கு மருந்து தெளித்துவிட்டு கைகளைக் கழுவாது, காலை வேளை உணவை உட்கொண்ட போது, அந்த உணவு விஷமடைந்தமையால் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மஸ்கெலியா, நல்லதண்ணி, லக்சபான தோட்ட, வாழமலைப் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (03) இச்சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், ஒரு பிள்ளையின் தந்தையான அதே பகுதியைச் சேர்ந்தவரென்பதுடன், குறித்த நபர் ஆபத்தான நிலையைத் தாண்டியுள்ளதாக மஸ்கெலியா வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .