Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு அவர் நியமிக்கப்பட்டால் அது, தேசிய அரசாங்கத்தின் மற்றுமொரு திருப்புமுனை' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றம் இதுவரை அமைக்கப்பட்ட நாடாளுமன்றங்களில் இருந்து முற்றிலும் வேறுப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஒப்புதலுக்கமைய தேசிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு நாட்டில் நல்லாட்சி முன்னெடுக்கப்படுகின்றது.
பெயரளவில் மட்டும் நல்லாட்சி என்பதை விட செயலிலும் நல்லாட்சி படிப்படியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதில் ஒரு மைல் கல்லாக இன்று(3) கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படவுள்ளதாக அறியமுடிகிறது. அவ்வாறு நியமிக்கப்பட்டால் அது வரவேற்கக் கூடியது மட்டுமன்றி தேசிய அரசாங்கத்தின் மற்றுமொரு வெற்றியாகவும் அமையும்' என்றார்.
'சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுவதால், சர்வதேச சமூகம் எமது நாட்டின் மீதும் நல்லாட்சி மீதும் நம்பிக்கை கொள்ளுமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
த.தே.கூ.வின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மலையக மக்களின் சார்பாகவும் இந்திய வம்சாவழி மக்கள் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
4 hours ago