ஆ.ரமேஸ் / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிக நீண்டகாலமாக, குன்றும் குழியுமாக இருந்த எஸ்கடேல் தோட்டப் பிரதான வீதி, 10 இலட்சம் ரூபாய் செலவில் கொங்கிரீட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியை, குறித்தத் தோட்டத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தினமும் பயன்படுத்தி வருகின்ற நிலையில், இந்தப் பாதையை செப்பனிட்டுத் தருமாறு, நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலுயோகராஜிடம், தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக, இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதற்கு அமைய, மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட 1 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வீதி செப்பனிடப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago