Editorial / 2023 செப்டெம்பர் 26 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
மனநலம் பாதிக்கப்பட்டு தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 18 வயதுடைய இளைஞன் வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையின் 6வது மாடியில் உள்ள வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர், ஐந்தாவது மாடியில் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பன்வில, கந்தேகும்புர பகுதியைச் சேர்ந்த ஹர்ஷன லக்ஷான் தில்ருக்ஷ என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
50 minute ago
1 hours ago