2026 மே 06, புதன்கிழமை

’ஒருவர் மாத்திரம் செல்லவும்’

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

 

பசறை பிரதேச பொது சுகாதார காரியாலயத்தில், பசறை பிரதேச செயலாளர் தலைமையில், இன்று (25) விசேடக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.

இதில், பொதுசுகாதார பரிசோதகர்கள், பசறை நகர வர்த்தக சங்க உறுப்பினர்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, நாளை (26) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்போது, மக்களுக்கான அத்தியாவசியப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கு, ச.தொ.ச மற்றும் சில குறிப்பிட்ட வியாபார நிலையங்களை மாத்திரம் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எனவே, கூட்டமாகக் கூடாது, குடும்பத்தில் ஒருவர் மாத்திரம் கடைகளுக்குச் சனெ்று வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .