2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஓடுவதற்கு முன்னர் ரயில் வீதி பரிசோதிக்கப்பட்டது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

மலையக ரயில் பாதையில் நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா வரையான பகுதியில் மண்மேடு சரிவு, கற்கள் சரிவால் மலையக்துக்ன ரயில் போக்குவரத்து இந்த மாதம் 2ஆம் திகதியிலிருந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இவ்வாறு  பாதிப்புக்குள்ளாகியுள்ள ரயில் போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் ரயில் பாதைகளை பரிசோதிக்கும் நிகழ்வு நேற்று (8) முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய நானுஓயா ரயில் நிலையத்தின் உதவி மாவட்ட பொறியியலளர் நிசல் லியனரோச்சி நேற்று (8) நானுஓயாவிலிருந்து ரொசல்ல வரை கண்காணிப்பு பணிகளை முன்னெடுத்தார்.

இதன்போது ரயில் வீதியில் விழுந்துள்ள கற்பாறைகளை அகற்ற பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .