Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரவிந்து விராஜ் அபயசிறி
மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேற்படி மாவட்டங்களில் நிலவும் குடிநீருக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக பிரதேச, மாகாண சபை மற்றும் உலக வங்கியின் நிதி உதவித்திட்டத்தின் கீழ், 207 குடிநீர் செயற்;றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் 60 செயற்றிட்டங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாது கைவிடப்பட்டுள்ளதால் தாம் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பூஜாப்பிட்டிய, கலகெதர, உடுதும்பர, யட்டியாவத்த, அல்லேபொல்ல, அமங்ககொரல, வில்கமுவ, உக்குவெல ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இக்குடிநீர் திட்டம் கைவிடப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உடனடி தீர்வைப் பெற்றுத்தர முன்வர வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .