2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கஜமுத்துக்களுடன் ஐவர் கைது

Freelancer   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை - அலுவிகாரை விளையாட்டு அரங்கிற்கு அருகில் கஜமுத்துக்களுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிமடை மற்றும் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 21, 25, 26 மற்றும் 28 வயதுடையவர்களாவர்.

சந்தேகநபர்களை இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X