2026 மே 09, சனிக்கிழமை

dd

கட்டாக்காலி மாடுகளால் அசௌகரியம்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை நகரில் கட்டுப்பாடின்றி மேய்சலுக்கு விடப்பட்டுள்ள மாடுகளால், தமது வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகள் குறித்து உரிமையாளர்கள் கவனத்திற்கொள்வதில்லை என்றும், நகரில் மேய்ந்துத் திரியும் மாடுகள், வியாபார நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களைக் கடித்து நாசமாக்குவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் வலப்பனை பிரதேச சபையின் கவனத்துக்கு பலமுறை கொண்டு ​சென்ற போதிலும் பிரதேச சபை அது குறித்து கவனம் செலுத்தவில்லை என்றும் எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம்​ செலுத்த வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .