2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கண்டி டெங்கில் 11 பேர் மரணம்

Editorial   / 2017 ஜூலை 13 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கண்டி, ஒகெஸ்டா வத்தையை வதிவிடமாகக் கொண்ட 14 வயதான மாணவியொருவர் மரணமடைந்துள்ளார்.

இவர், கண்டியில் உள்ள பிரபல்யமான சர்வதேச பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி பயின்றவராவார். இந்த மாணவியின் மரணத்துடன், கண்டி மாவட்டத்தில், டெங்கு காய்ச்சலினால் இவ்வருடத்தில் இதுவரைமட்டும் 11 பேர் மரணித்துள்ளனர்.  

இதேவேளை, கண்டி மாவட்டத்தில், மட்டும் இதுவரையிலான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால், 4,330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .