2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கம்பளவத்தையில் நால்வருக்குத் தொற்று

Kogilavani   / 2021 ஜனவரி 20 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீ   

கம்பளை தொழுவ சுகாதார பிரிவுக்குட்பட்ட கம்பளவத்தப் பகுதியில், மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டியில் தனியார் வைத்தியசாலையொன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு, அண்மையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களும், தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே நால்வருக்குத் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

இவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X