2026 ஜனவரி 21, புதன்கிழமை

கம்பளையில் இருவர் திடீரென உயிரிழப்பு

Kogilavani   / 2021 மே 19 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

கம்பளை பிரதேசத்தின் இருவேறுப் பகுதிகளில் இருவர் திடீரென கீழே விழுந்து மரணமடைந்துள்ளனர் என்று, கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விருச் சம்பவங்களும் இன்று (19) இடம்பெற்றுள்ளன.

கண்டி வீதியிலுள்ள கோவிலுக்கு அருகிலும் ஒருவரும் மற்றைய நபர் ரிவர்சைட் பகுதியிலும் விழுந்து மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மேற்படி இருவரின் உடல்களும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் உடல்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X