2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2017 மார்ச் 24 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ   

இரத்தினபுரி மாநகர சபையை மையமாகக் கொண்டு இரத்தினபுரி மாவட்டத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.  

இதற்கமைய சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 380 இலட்சம் ரூபாய் செலவில் இரத்தினபுரி, கனாந்தொல பிரதேசத்தில் அமைக்கப்பட உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள், நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.  

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண சமூகசேவைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு கிராமிய கைத்தொழில் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, சப்ரகமுவ மாகாண சபையின் சபை முதல்வர் அசோக ஜயவர்தன, உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X