2026 மே 09, சனிக்கிழமை

dd

கவனிப்பாரற்ற நிலையில் பழைய பாலம்

மொஹொமட் ஆஸிக்   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், மகாவலி கங்கையைக் கடப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட கண்டி, லேவெல்ல இரும்புக் கம்பிப் பாலம், தற்போது கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தும்பரை பிரதேசத்துக்கு இலகுவாகச் செல்வதற்காக, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த இருப்புப் பாலத்துக்குப் பதிலாக, பின்னர் புதிய பாலம் ஒன்று அவ்விடத்தில் நிர்மாணிக்கப்பட்டது.

எனினும் புதிய பாலம் வந்த பின்னர், பழைய பாலம் அப்படியே கைவிடப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட, வரலாற்றுக் கதை கூறும் இந்தப் பாலத்தை பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .