2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

காருடன் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்

Freelancer   / 2021 ஜூலை 17 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பண்டாரவளை - ஹப்புத்தளை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து ககாகொல்லை என்ற இடத்தில் இன்று (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் உயிரிழந்ததுடன், காரின் சாரதி ஆபத்தான நிலையில் தியத்தலாவை  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், ஹப்புத்தளையில் இருந்து பண்டாரவளைக்கு  வந்து கொண்டிருந்த காருமே மோதி விபத்துக்குள்ளாகின. 

இவ்விபத்து குறித்து ஹப்புத்தளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .