2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கால்வாய்க்கு அருகிலிருந்து சிசு மீட்பு; பெண் கைது

Editorial   / 2017 நவம்பர் 07 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை, ரகலவத்த பிரதேசத்திலுள்ள கால்வாய்க்கு அருகிலிருந்து, பிறந்து ஒரு நாளேயான சிசுவை மீட்டுள்ள பொலிஸார், சிசுவின் தாயென கருதப்படும் 29 வயது பெண்ணையும், நேற்றுக் கைதுசெய்துள்ளனர்.

மொனராகலை, மரகல தோட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எறும்புகள் உடலில் மொய்த்துக்கொண்டிருந்த நிலையிலேயே, சிசு மீட்கப்பட்டுள்ளதென்றும் சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .