2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குடியிருப்பின் மீது மண் திட்டு இடிந்து விழுந்தது

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

சாமி மலை - கவரவில தோட்ட  பாக்ரோ பிரிவில் நேற்று நள்ளிரவு, குடியிருப்பு ஒன்றின் மீது, மண் திட்டு சரிந்து விழுந்ததால், இரண்டு  குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர், உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மண்திட்டு குடியிருப்பின் மீது சரிந்து விழும் போது, கர்ப்பிணியொருவரும் இருந்ததாகவும், எனினும் இச்சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான சமைத்த உணவுகளை, மஸ்கெலியா பிரதேச சபை ஊடாக வழங்கி வருவதாக, பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தெரிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .